×

ஜூவல்லரியில் நகை வாங்குவது போல நடித்து வளையல் திருடிய 3 பெண்கள் சிசிடிவி காட்சிகள் வெளியானது

தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி சிலை அருகே தயா என்பவர் ஜூவல்லரி நடத்தி வருகிறார்.நேற்று பிற்பகல் 3 மணிக்கு 3 பெண்கள் தங்க டாலர் வாங்க வந்தாக கூறி கடையில் இருந்த நகைகளை நோட்டமிட்டனர்.அப்போது எங்களுக்கு டாலர் பிடிக்கவில்லை வளையல் காட்டுங்கள் என நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். கடை உரிமையாளர் 12,கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களை காண்பித்துள்ளார். அப்போது 3 பெண்களில் ஒருவர் தங்க வளையல்களில் ஒரு ஜோடி வளையலை கையில் அணிந்து கொண்டார்.

இரண்டு பெண்கள் வேறு டிசைனில் வளையல் காட்டுமாறு கடை ஊழியரை கேட்டு வந்துள்ளனர்.அதற்காக ஷோகேஷில் வைத்திருந்த வேறு தங்க வளையல்களை நகைக்கடைக்காரர் காண்பித்துள்ளார்.அதே நேரத்தில் தங்க வளையல் அணிந்திருந்த ஒரு பெண் கடையை விட்டு நைசாக கிளம்பிச் சென்றார் அதன்பிறகு மீதம் இருந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு மாடல் எதுவும் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு கடையிலிருந்து நைசாக சென்று விட்டனர்.

மூன்று பெண்களும் சென்ற பிறகு நகைகளை சரிபார்த்த போது 12 கிராம் எடை கொண்ட 2 வளையல்கள் மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மூன்று பேரும் நகை கடை உரிமையாளரை ஏமாற்றி தங்க வளையல்களை திருடி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் நகரில் பல இடங்களில் தேடியும் மூன்று பெண்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை அதன் பிறகு தனது கடையில் தங்க வளையல்கள் திருடு போன சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நகைக்கடைக்காரர்கள் உஷாராக இருங்கள் எங்களது நகை கடையில் மூன்று பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்றுள்ளனர் என பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது தாராபுரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரை நேரில் விசாரித்து வருகின்றனர்.

The post ஜூவல்லரியில் நகை வாங்குவது போல நடித்து வளையல் திருடிய 3 பெண்கள் சிசிடிவி காட்சிகள் வெளியானது appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Tiruppur district ,Tarapuram Amravati ,Daya ,
× RELATED வலங்கைமான் அருகே ரூ.4.70 கோடியில் திட்டை, தாராபுரம் சாலை பணி